search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை தற்கொலை"

    • திருச்சியில் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த புதுமாப்பிள்ளை தூக்கில் தற்கொலை செய்துகொண்டார்
    • மனமுடைந்த கார்த்திக் தனிமையில் யாருடனும் பேசாமல் விரக்தியாக இருந்துள்ளார்

    திருச்சி:

    திருச்சி உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கார்த்திக் (வயது 27). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார்.

    இவருக்கும், இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கார்த்திக்கின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.

    இதனால் கார்த்திக் தன் மனைவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

    அதன் பின்னர் கார்த்திக் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் தனிமையில் யாருடனும் பேசாமல் விரக்தியாக இருந்துள்ளார்.

    இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
    • பணத்தை வேகமாக திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார்.

    கோவை :

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா (வயது 23). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண செலவுக்காக அய்யப்பா அருகில் உள்ளவர்களிடம் ரூ.28 ஆயிரம் வாங்கி உள்ளார்.அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

    இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.

    உடனே அவர் அய்ப்பாவிடம் பணத்தை வேகமாக திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார்.இதனால் அய்யப்பா கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.

    அவர் அய்யப்பா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அய்யப்பாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலை செய்து வந்தார்.
    • கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு

    கோவை,

    சேலம் வாழப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கோவை அன்னூர் அடுத்த அச்சம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலை செய்து வந்தார்.

    இவர் மரியம் ஹேமா என்பவரை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3-ந் தேதி மரியம் ஹேமாவை திருமணம் செய்து கொண்டார்.

    குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கினர். இந்தநிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட தொடங்கியது. இதனால் கார்த்திக் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார்த்திக் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக்கின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து 6 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×